சினிமா
செல்வராகவன் - கீதாஞ்சலி

செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

Published On 2021-01-07 14:05 GMT   |   Update On 2021-01-07 14:05 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதியினருக்கு 3வது குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான இருப்பவர் செல்வராகவன். இவர் இயக்குனர் கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு ஓம்கார் என்ற மகனும் லீலாவதி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் தற்போது மூன்றாவது குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ள கீதாஞ்சலி, குழந்தை நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அப்பதிவில் குழந்தைக்கு 'ரிஷிகேஷ்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.



செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதியினருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News