சினிமா
ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய்க்கு எழுதிய கதையை பிரபல நடிகரிடம் சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ்.... அவரும் ஓகே சொல்லிட்டாராமே?

Published On 2020-12-22 07:29 GMT   |   Update On 2020-12-22 07:29 GMT
விஜய்யின் 65-வது படத்திற்காக எழுதிய கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், பிரபல நடிகரிடம் சொல்லி ஓகே வாங்கி உள்ளாராம்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கிய தர்பார் படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகியது. அதன்பின் விஜய்யின் 65 படத்தை இயக்குவதாக இருந்தார். இறுதியில் பட்ஜெட் பிரச்சனை காரணமாக அவர் படத்திலிருந்து விலகினார். தற்போது விஜய்யின் 65-வது படத்தை இயக்க நெல்சன் ஒப்பந்தமாகி உள்ளார்.

இதனிடையே ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது அதுகுறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சமீபத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து கதை சொன்னதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கும் அந்தக் கதை பிடித்துவிட்டதாம். 



முழுக்க முழுக்க கமர்ஷியல் கதையம்சம் கொண்ட அப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் விஜய்க்கு சொன்ன அதே கதையை தான் சிவகார்த்திகேயனிடம் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னதாகவும் பேச்சு அடிபடுகிறது. ஜனவரி மாதம் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாம்.
Tags:    

Similar News