சினிமா
ஊரடங்கால் அவருக்கு அஞ்சலி கூட்டம் நடத்த முடியவில்லை - அமைச்சர்
கொரோனா ஊரடங்கு இருந்ததால் அவருக்கு அஞ்சலி கூட்டம் நடத்த முடியவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
ஆதிக்க வர்க்கம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்த பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, 'தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்தால் தியேட்டரில் 100 சதவீத சீட் நிரப்ப பரிசீலனை செய்யப்படும். தமிழக அரசால் அங்கீகாரம் பெற்றது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். அவர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தும்.
பாடகர் எஸ்பிபி மறைந்த போது கொரோனா ஊரடங்கு இருந்ததால் அவருக்கு அஞ்சலி கூட்டம் நடத்த முடியவில்லை. விரைவில் அரசு சார்பில் அஞ்சலி கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.