சினிமா
கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ

Published On 2020-11-28 07:26 GMT   |   Update On 2020-11-28 07:26 GMT
தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தூங்கும் போது பிரபல ஹீரோ ஒருவர் செல்பி எடுத்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், விஷால், சிவகார்த்திகேயன் எனப் பிரபல ஹீரோக்களுடன் தமிழில் நடித்து வந்தார்,. தெலுங்கு படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் பிஸியாக நடித்து வந்தார். 

இவர் தமிழில் பெண்குயின் படத்தில் நடித்தார். அப்படம் தியேட்டரில் வெளியாகாமல் ஒடிடி தளத்தில் வெளியானது. பிறகு தெலுங்கில் மிஸ் இந்தியா படத்தில் நடித்தார். அப்படமும் ஒடிடி தளத்தில் வெளியானது. 

தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணி காயிதம் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கில் நிதின் நடிக்கும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார். அதற்கான படப்பிடிப்பு துபாயில் நடக்கிறது. படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் கீர்த்தி சுரேஷ் சேரில் அமர்ந்தபடி கண்களில் துணியை வைத்து மறைத்துக் கொண்டு அப்படியே சாய்ந்த படி குட்டி தூக்கம் போட்டார். அதைக் கவனித்த ஹீரோ நிதின். இயக்குனர் வெங்கி அட்லுரி இருவரும் சத்தமில்லாமல் அவர் அருகே சென்றனர்.



கீர்த்தியை டீஸ் செய்வதற்காகக் கண்களில் துணியை வைத்துக் கொண்டு தூங்கிய நிலையில் கீர்த்தி இருக்கும்போது செல்ஃபி படம் எடுத்து வெளியிட்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News