சினிமா
சினேகன்

விபத்து ஏற்படுத்திய சினேகன் - போலீசார் வழக்கு பதிவு

Published On 2020-11-17 14:57 GMT   |   Update On 2020-11-17 14:57 GMT
பிரபல பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவருமான சினேகன் ஏற்படுத்திய விபத்து காரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு நடிகர் கமல் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைந்த சினேகன், முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சவேரியாபுரம் மற்றும் திருமயத்துக்கு இடையே சினேகன் சென்ற கார், மோட்டார் சைக்கிளில் வந்த அருண் பாண்டி என்ற இளைஞர் மேல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அருண் பாண்டி கீழே விழுந்து படுகாயமடைந்தார். 



இதையடுத்து அவர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த விபத்து தொடர்பாக திருமயம் போலீசார் சினேகன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு விசாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News