சினிமா
நடிகை சாக்ஷி அகர்வால்

சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்

Published On 2020-06-30 11:52 GMT   |   Update On 2020-06-30 11:52 GMT
மத்திய அரசு டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதற்கு சாக்‌ஷி அகர்வால் நன்றி கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன் நடிகை சாக்‌ஷி அகர்வால்,  தன்னை டிக்டாக்லிருந்து விலக்கி கொண்டு சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

 நேற்று மத்திய அரசு டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை விதித்திருப்பதை அறிந்து தனது நன்றியை தெரிவித்துள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால்.



 இது இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முக்கிய முடிவு என்றும், இந்த முடிவு இந்தியாவின் சுயசார்பு திறனை மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News