சினிமா
சூர்யா

ரஜினி, அஜித் எடுத்த முடிவை பின்பற்றும் சூர்யா

Published On 2020-06-27 09:00 GMT   |   Update On 2020-06-27 11:18 GMT
நடிகர்கள் ரஜினி மற்றும் அஜித் எடுத்த முடிவை தற்போது சூர்யா பின்பற்றி புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரஜினியின் அண்ணாத்த’, அஜித் நடித்து வரும் ’வலிமை’ உள்பட பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி கூட இல்லை என்ற நிலை வந்த பின்னரே ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் தான் கலந்துகொள்ள இருப்பதாக ரஜினியும், இதே முடிவை அஜித்தும் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியானது.

 இந்த நிலையில் தற்போது சூர்யாவும் தன்னுடைய அடுத்த திரைப்படமான ’அருவா’ படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.



 படக்குழுவினர்களின் பாதுகாப்பை முன்னிட்டே சூர்யா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. எனவே அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் தான் ’அருவா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News