சினிமா
சுந்தர் சி, வடிவேலு

உருவாகிறது தலைநகரம் 2.... மீண்டும் இணையும் சுந்தர் சி - வடிவேலு?

Published On 2020-06-26 09:00 GMT   |   Update On 2020-06-26 09:00 GMT
தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை சுராஜ் இருந்தார். இப்படத்தில் இடம்பெறும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், தலைநகரம் படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திலும் சுந்தர் சி நாயகனாக நடிப்பார் என கூறப்படுகிறது. இப்படத்தை இயக்குனர் வி.இசட்.துரை இயக்க உள்ளார். இவர் தற்போது அமீரின் நாற்காலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பின் தலைநகரம் 2-ம் பாகத்தை இயக்க அவர் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.



சுந்தர் சி-யின் இருட்டு படத்தை வி.இசட்.துரை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து ‘முகவரி’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘நேபாளி’, ஷாமின் ‘6 மெழுகுவர்த்திகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
Tags:    

Similar News