சினிமா
மான்வி கக்ரூ

3 மடங்கு சம்பளம் தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தார்- இயக்குனர் மீது நடிகை புகார்

Published On 2020-04-13 04:57 GMT   |   Update On 2020-04-13 04:57 GMT
3 மடங்கு சம்பளம் தருவதாக கூறி இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
நடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதாக மீ-டூவில் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினர். தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டில் சிக்கினர். தற்போது இன்னொரு நடிகையும் பாலியல் புகார் கூறியுள்ளார். அவரது பெயர் மான்வி கக்ரூ. இவர் நோ ஒன் கில்டு ஜெஸிகா, பீகே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்கள், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். டிவிஎப் டிப்ளிங், போர் மோர் ஷாட்ஸ், மேட் இன் ஹெவன் போன்ற வெப் தொடர்கள் இவரது நடிப்பில் வந்தன.

மான்வி கக்ரூ அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னை போனில் ஒருவர் அழைத்து, தன்னை இயக்குனர் என்று அறிமுகப்படுத்தினார். ஒரு வெப் தொடர் எடுக்கிறோம், அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறினார். முதலில் கதையை சொல்லுங்கள், எனக்கு பிடித்து இருந்தால் சம்பளம் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் குறித்து பேசலாம் என்றேன். அவர் எனது சம்பளத்தை கூறினார். அது குறைவாக இருக்கிறது என்றேன். உடனே சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்தி இந்த தொகைக்கு சம்மதமா? என்றார். 



ஒரேயடியாக இவ்வளவு சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாரே! என்று வியந்தேன். அதன்பிறகு இவ்வளவு சம்பளம் என்னால் கொடுக்க முடியும், அதற்கு பதிலாக நீங்கள் அதற்கு உடன்பட வேண்டும் என்றார். இதனால் கோபமாகி அவரை திட்டினேன். இப்படி பேச உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்? போலீசில் புகார் செய்வேன் என்று கோபமாக பேசிவிட்டு போனை வைத்து விட்டேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News