சினிமா
அட்லீ

அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட அட்லீ

Published On 2020-04-13 03:02 GMT   |   Update On 2020-04-13 03:02 GMT
விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து 3 படங்களை இயக்கிய அட்லீ, தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் அதுகுறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இயக்குனர் அட்லீ பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. தற்போது 3 ஆண்டு இடைவேளைக்கு பின் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அட்லீ வெளியிட்டுள்ளார். அதன்படி, 'அந்தகாரம்'என்ற படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து அட்லீ தயாரிக்கிறார்.
விக்னராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்க, எட்வின் சாகே ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அந்தகாரம் படத்தின் டிரைலர் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியிடப்படும் என அட்லீ தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News