சினிமா
ஸ்ரத்தா ஸ்ரீநாத்

பஸ் பயணத்தில் சில்மிஷங்கள் - அஜித் பட நடிகை வருத்தம்

Published On 2020-04-05 08:03 GMT   |   Update On 2020-04-05 08:03 GMT
கல்லூரியில் படித்த காலத்தில் பஸ் பயணத்தில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை அஜித் பட நடிகை பகிர்ந்துள்ளார்
அஜித்குமாரின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். மணிரத்னத்தின் காற்று வெளியிடை, விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். கொரோனா வைரஸ் பரவிய பிறகு 2 தடவை உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டதால் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், கல்லூரியில் படித்த காலத்தில் பஸ் பயணத்தில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:- “நான் நிர்பயா வழக்கு தொடர்பான ஒரு தொடரை இணையதளத்தில் பார்த்து அதிர்ந்து போனேன். பஸ் பயணத்தில் கூட்டத்துக்குள் சிக்கும் பெண்கள் பல கொடுமைகளை தினமும் அனுபவிக்கின்றனர். அதுபோன்ற கொடுமை எனக்கும் நடந்துள்ளது. நான் கல்லூரியில் படித்த காலத்தில் கூட்டமான பஸ்சில் பயணம் செய்தேன். 



ஒவ்வொரு நாளும் யுத்தத்துக்கு செல்வதுபோலவே இருக்கும். யாராவது சில்மிஷம் செய்வார்களோ என்ற பயமும் இருக்கும். நிர்பயாவைப்போல் நானும் கூட்டம் இருக்கும் பஸ்சை தவிர்க்க தனியார் பஸ்சில் பயணித்து இருக்கிறேன். அந்த தொடரை பார்த்தபோது எனக்கு பழைய சம்பவங்களை நினைத்து பயம் ஏற்பட்டது”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News