சினிமா
பிரதமர் வேண்டுகோளுக்கு நடிகர் சிரஞ்சீவி ஆதரவு
பிரதமர் மோடியின் விளக்கு ஏற்றுங்கள் வேண்டுகோளுக்கு, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் விளக்கு ஏற்றுங்கள் வேண்டுகோளுக்கு, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: "5 ஏப்ரல் அன்று இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்களுக்கு, நமது பிரதமரின் அழைப்புக்கு மரியாதை கொடுத்து, கொரோனாவின் இருட்டையும், சோகத்தையும், நாம் விளக்குகள் ஏற்றி விரட்டுவோம். நமது நாட்டுக்காக இணைந்து நிற்போம். ஒருவர் மற்றொருவருக்காகத்தான் நிற்கிறோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவோம்" இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.