சினிமா
ஷாருக்கான்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஷாருக்கான் உதவி

Published On 2020-04-04 06:03 GMT   |   Update On 2020-04-04 06:03 GMT
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இருக்கிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்ய உள்ளதாக நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும். தானும், தனது மனைவியான கவுரிகான் உரிமையாளர்களாக இருக்கும் ரெட் சில்லிஸ் நிறுவனம் சார்பில் மராட்டிய மாநில முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும். 

மேற்கு வங்கம் மற்றும் மராட்டிய மாநிலத்துக்கு 50 ஆயிரம் கொரோனா தடுப்பு உபகரணங்கள் (பி.பி.இ. கிட்ஸ்) வழங்கப்படும். மும்பையில் உள்ள 5 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். 2 ஆயிரம் பேருக்கு உணவு சமைத்து வீட்டு வேலை செய்பவர்கள், ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்படும். மேலும் மும்பையில் உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News