சினிமா
மோகன்லால்

மோகன்லாலுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பியவர்களை தேடும் போலீசார்

Published On 2020-04-03 17:36 GMT   |   Update On 2020-04-03 17:36 GMT
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
பிரபல மலையாள நடிகர் மோகன்லால். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக சமூகவலைதளங்களில் மர்ம கும்பல் ஒன்று வதந்தி பரப்பி இருக்கிறார்கள். இவர்கள் யார் என கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வைரலாகியுள்ளது. அதில், கொரோனா பாதிப்பால் நடிகர் மோகன்லால் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

ஏப்ரல் பூல் செய்வதற்காக இந்த வதந்தியை பரப்பியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.  

கேரள முதல்வர் பினராயி விஜயனும் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளார்.
Tags:    

Similar News