சினிமா
விஜய் சேதுபதி - நெல்லை பாரதி

பத்திரிகையாளர் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி

Published On 2020-04-03 13:31 GMT   |   Update On 2020-04-03 13:31 GMT
பிரபல சினிமா பத்திரிகையாளர் நெல்லை பாரதியின் மறைவுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சினிமா பத்திரிக்கையாளர்களில் பிரபலமானவர் நெல்லை பாரதி. இவர் எழுத்தாளரும், பாடலாசிரியாகவும் இருந்திருக்கிறார். இவர் இன்று காலை அவரது வீட்டில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

 இவரது மறைவிற்கு  பத்திரிகையாளர்கள், திரையுலகைச் சேர்ந்த பலரும் ஆழ்ந்த  இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவு இருப்பதால் பலரும் அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை. 

  இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, நெல்லை பாரதியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
Tags:    

Similar News