சினிமா
குழந்தைகள் பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய பிரஜன், சான்ட்ரா
தனது குழந்தைகளின் முதல் பிறந்தநாளை பிரஜன், சான்ட்ரா தம்பதினர் எளிமையாக கொண்டாடி இருக்கிறார்கள்.
தனியார் டிவி சேனலில் பிரபலமான தொகுப்பாளராக இருந்தவர் பிரஜன். அதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவரும் நடிகை சான்ட்ராவும் காதல் திருமணம் செய்துக் கொண்டனர்.
இந்த தம்பதினருக்கு கடந்த வருடம் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இவர்களுக்கு மித்ரா, ருத்ரா என்று பெயர்வைத்தார்கள். குழந்தைகளின் முதல் பிறந்தநாளை நேற்று கொண்டாடி இருக்கிறார்கள். தற்போது ஊரடங்கு உத்தரவினால், அனைவரும் வீட்டில் இருப்பதாலும் மிகவும் எளிமையாக பிறந்த நாளை எளிமையாக கொண்டாடி இருக்கிறார்கள்.
ஆனால், சமூக வலைத்தளத்தில் குழந்தைகளுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.