சினிமா
பிருத்விராஜ்

படக்குழுவினர் 58 பேருடன் ஜோர்டான் பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் பிருத்விராஜ்

Published On 2020-04-02 09:19 GMT   |   Update On 2020-04-02 09:19 GMT
படக்குழுவினர் 58 பேருடன் ஜோர்டான் பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் நடிகர் பிருத்விராஜ் தங்களை இந்தியாவுக்கு மீட்டுச் செல்லுமாறு உதவி கோரி கடிதம் எழுதியுள்ளார்.
‘ஆடுஜீவிதம்‘ என்ற நாவலை அடிப்படையாக வைத்து பிருத்விராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் உள்ள வாடிரம் பாலைவனப் பகுதியில் நடந்து வந்தது. கொரோனா அச்சத்தால் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தது படக்குழு. அங்கிருந்து திரும்ப முடியாத நிலை இருந்ததால் ஏப்ரல் 10 வரை படப்பிடிப்பைத் தொடர முடிவெடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஜோர்டான் வந்திறங்கும் அனைத்து வெளிநாட்டினரையும் 14 நாட்கள் தனிமையில் வைக்க அந்த அரசு முடிவு செய்ததால், அதில் சில முக்கிய நடிகர்களும் அடங்குவர். தற்போது படப்பிடிப்பு ரத்தானதால் இயக்குநர் ப்ளெஸ்ஸி, கேரள திரைப்படச் சங்கத்துக்கு, தங்களது 58 பேர் கொண்ட குழுவை மீட்டுச் செல்லுமாறு உதவி கோரி கடிதம் எழுதியுள்ளார். 



இதுகுறித்து விரிவாகப் பதிவிட்டுள்ள நடிகர் பிருத்விராஜ், “எங்கள் குழுவில் ஒரு மருத்துவர் இருக்கிறார். ஒவ்வொரு 3 நாட்களுக்கு ஒரு முறை அவர் எங்கள் ஒவ்வொருவரையும் பரிசோதிக்கிறார். மேலும், ஜோர்டான் அரசாங்கம் நியமித்துள்ள மருத்துவரும் அவ்வப்போது எங்களைப் பரிசோதிக்கிறார். 

தற்போது உலகில் இருக்கும் நிலையில் எங்கள் குழுவில் இருக்கும் 58 பேரை மீட்பது என்பது இந்திய அதிகாரிகளின் பிரதான கவலையாக இருக்காது என்பதை என்னால் முழுவதும் புரிந்துகொள்ள முடிகிறது. உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பக் காத்துக் கொண்டிருக்கின்றனர். எங்களுக்கு எப்போது சரியான நேரமும், வாய்ப்பும் வருகிறதோ அப்போது நாங்களும் இந்தியா திரும்புவோம் என நம்புகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News