சினிமா
மிஷ்கின், பிரசன்னா

மிஷ்கின் இல்லாமல் துப்பறிவாளன் எப்படி இருக்கும்? - பிரசன்னா விளக்கம்

Published On 2020-04-02 03:58 GMT   |   Update On 2020-04-02 03:58 GMT
மிஷ்கின் இல்லாமல் துப்பறிவாளன் எப்படி இருக்கும் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகர் பிரசன்னா விளக்கம் அளித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர். 

இந்த இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமி நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடித்துள்ளது. இதனிடையே விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இப்படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கப்பட்டு, மீதி படத்தை விஷாலே இயக்க உள்ளார்.



இந்நிலையில், துப்பறிவாளன் படத்தில் விஷாலுடன் நடித்துள்ள பிரசன்னாவிடம், மிஷ்கின் இல்லாமல் துப்பறிவாளன் எப்படி இருக்கும் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரசன்னா, ''துரதிர்ஷ்டவசமாக மிஷ்கின் இந்த படத்தில் இல்லை. அதற்காக நான் வருந்துகிறேன். அதே நேரம் விஷால் சிறப்பானதை கொடுப்பார் என நம்புகிறேன். அவரிடம் நிரூபிக்கபட வேண்டியவை நிறையவுள்ளது'' என தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News