சினிமா
அதுல்யா ரவி

தம்பியுடன் குடுமிப்பிடி சண்டை போட்ட அதுல்யா

Published On 2020-04-01 19:50 IST   |   Update On 2020-04-01 19:50:00 IST
தமிழில் காதல் கண் கட்டுதே படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அதுல்யா தம்பியுடன் சண்டை போட்டுள்ளார்.
அதுல்யா 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானர். அதை தொடர்ந்து ஏமாலி (2018) , நாடோடிகள் 2 (2019) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 தற்போது படப்பிடிப்புகள் இல்லாததால் மேலும் தமிழகத்தில் 144 தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அதுல்யா தன்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். வீட்டில் சும்மா இருக்க முடியாத அதுல்யா தன்னுடைய தம்பியுடன் குடுமிப்பிடி சண்டை போட்டுள்ளார். இதை அதுல்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Similar News