சினிமா
மனைவி கஜோல் உடன் அஜய் தேவ்கன்

மனைவி, மகளுக்கு கொரோனா பாதிப்பா? - அஜய் தேவ்கான் விளக்கம்

Published On 2020-04-01 12:57 GMT   |   Update On 2020-04-01 12:57 GMT
மனைவி கஜோல் மற்றும் மகளுக்கு கொரோனா பாதிப்பு என்று வெளியான செய்திக்கு நடிகர் அஜய் தேவ்கான் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் அஜய்தேவ்கான். இவருக்கும் நடிகை கஜோலுக்கும் 1999-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கஜோல் தமிழில் பிரபுதேவா ஜோடியாக ‘மின்சார கனவு’ படத்தில் நடித்து இருந்தார். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

இந்த தம்பதியின் 16 வயது மகளான நைசா, சிங்கப்பூரில் உள்ள பள்ளியொன்றில் படித்து வருகிறார். சமீபத்தில் கஜோல் சிங்கப்பூருக்கு சென்று இருந்தார், கொரோனா பரவல் காரணமாக அங்கு பள்ளிகள் மூடப்பட்டதால் மகளை மும்பைக்கு அழைத்து வந்துவிட்டார். இந்த நிலையில் மகளை அழைத்துக்கொண்டு கஜோல் மருத்துவமனைக்கு சென்று இருந்தார். இதனால் இணையதளம் ஒன்றில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியானது. இது இந்தி திரையுலகினர் மத்தியில் பீதியை கிளப்பியது. 

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவவும் ஆரம்பித்தது. இதனை அஜய்தேவ்கான் டுவிட்டரில் மறுத்துள்ளார். “மனைவியும், மகளும் நலமாக உள்ளனர். எந்த பாதிப்பும் இல்லை. அவர்களை பற்றி பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News