சினிமா
அஜய் ஞானமுத்து - விக்ரம்

கோப்ரா படக்குழுவினரை தாக்கிய கொரோனா

Published On 2020-03-12 11:54 GMT   |   Update On 2020-03-12 11:54 GMT
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘கோப்ரா’ படக்குழுவினரை தாக்கி இருப்பதாக இயக்குனர் கூறியிருக்கிறார்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’  படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.



உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் நிலவி வரும் நிலையில், கோப்ரா படக்குழு எதற்கும் அஞ்சாமல் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் படக்குழுவினரை தாக்கியுள்ளதாக படத்தின் இயக்குனர் கூறியிருக்கிறார். கொரோனா வைரஸ் பரவி வருவதால் படப்பிடிப்பை நிறுத்தும்படி இந்திய அரசு அறிவித்திருப்பதால் இப்படி கூறியிருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
Tags:    

Similar News