சினிமா
தீபிகா படுகோனே

முன்பு இல்லாத மரியாதை இப்போது கிடைக்கிறது - தீபிகா படுகோனே

Published On 2020-03-12 08:46 GMT   |   Update On 2020-03-12 08:46 GMT
சினிமா துறையில் நடிகைகளுக்கு முன்பு இல்லாத மரியாதை இப்போது கிடைக்கிறது என நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “தற்போது நிறைய பெண்கள் சினிமாவை ஒரு தொழிலாக செய்ய தைரியமாக வருகிறார்கள். முந்தைய காலத்தில் நடிகைகளை மோசமாக பார்த்தனர். இந்த தொழிலுக்கு மரியாதை இல்லாமல் இருந்தது. பெரிய குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு எல்லா தகுதியும் இருந்தாலும் நடிப்பதற்கு பயந்தனர்.

ஆனால் இப்போது நடிகர்-நடிகைகளை பெருமையாக பார்க்கிறார்கள். வெளியே சென்றால் மரியாதை கொடுக்கிறார்கள். பிடித்த நடிகர், நடிகைகள் என்ன செய்தாலும் அதை பின்பற்ற விரும்புகிறார்கள். நிறைய பெண்கள் வேலையை விட்டுவிட்டு எழுத்தாளராக சினிமா துறையில் வந்து பணியாற்றுகிறார்கள்.



முன்பெல்லாம் கதாநாயகர்களுக்காக கதை எழுதும் நிலைமை இருந்தது. கதாநாயகிகள் என்றால் ஆடிப்பாடுகிறவர்கள், ரசிகர்களுக்கு போரடிக்காமல் இருப்பதற்காக வந்து போகிறவர்கள் என்று நினைத்தார்கள். அது இப்போது மாறி இருக்கிறது. கதாநாயகிகளுக்கு என்று பிரத்யேகமாக கதை எழுதும் காலம் வந்து விட்டது. சினிமா துறை மீது நம்பிக்கை ஏற்பட்டு புதிது புதிதாக நிறைய பேர் சினிமா பக்கம் வர ஆர்வம் காட்டுகிறார்கள். இது ஒரு நல்ல மாற்றம்.”

இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.
Tags:    

Similar News