சினிமா
மாதவன்

கொரோனா காலர் டியூனில் இருந்து அதை மட்டும் நீக்கிவிடுங்கள் - மாதவன்

Published On 2020-03-11 02:10 GMT   |   Update On 2020-03-11 02:10 GMT
கொரோனா விழிப்புணர்வு காலர் டியூனில் இருந்து அதை மட்டும் நீக்கிவிடுங்கள் என நடிகர் மாதவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற தொலைபேசி சேவை வழங்கி வரும் நிறுவனங்கள் மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் படி கொரோனா விழிப்புணர்வுக்காக பிரத்யேக காலர்டியூனை வழங்கி வருகிறது. இருமலுடன் ஆரம்பிக்கும் அந்தக் காலர் டியூனில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் இடம்பெற்றுள்ளது.

யாருக்காவது போன் செய்தால் முதலில் இருமல் சத்தம் கேட்கிறது. அதுவும் ஒலிக்கும் குரல் அசலாக இருமுவதை போலவே உள்ளது. நாம் தொடர்பு கொள்ளும் நபருக்குத்தான் ஏதோ பிரச்னையோ என யோசிக்க வைக்கிறது. சில நொடிகள் கடந்தபின் ‘கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு’ வசனங்களை பேசுகிறது. இது பீதியை கிளப்புவதால் எப்படி தவிர்ப்பது என்று கூகுளில் அதிகம் பேர் தேடியுள்ளனர்.



இந்தக் காலர் டியூன் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் மாதவன் கூறியிருப்பதாவது:- இப்போதெல்லாம் நான் யாருக்கு போன் செய்தாலும், கேட்கும் முதல் இருமல் சத்தம் என்னை மிரள வைக்கிறது. அது மத்திய சுகாதாரத்துறையின் விழிப்புணர்வு பிரசாரம் என்பது பின்னர் தான் தெரிய வருகிறது. சிறந்த பணி. சிறந்த விழிப்புணர்வு. ஆனால் அந்த இருமலை மட்டும் நீக்கி விடுங்களேன். நான் போன் செய்யும் ஒவ்வொரு நபரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதையே விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News