சினிமா
காவேரி கல்யாணி

புதிய அவதாரம் எடுத்த நடிகை காவேரி கல்யாணி

Published On 2020-03-09 22:51 IST   |   Update On 2020-03-09 22:51:00 IST
கண்ணுக்குள் நிலவு, சமுத்திரம், காசி படங்களில் நடித்து பிரபலமான நடிகை காவேரி கல்யாணி, தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழில் கண்ணுக்குள் நிலவு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காவேரி கல்யாணி. இப்படத்தை தொடர்ந்து சமுத்திரம், காசி உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

தற்போது காவேரி கல்யாணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். கே 2 கே புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில், உண்மை நிகழ்வுகளைக் அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித்துவமான காதல் கதையை, உளவியல் திரில்லர் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்.



இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

Similar News