சினிமா
சிபிராஜ்

அவருடன் நடிக்க பயந்தேன் - சிபிராஜ்

Published On 2020-03-09 08:31 GMT   |   Update On 2020-03-09 08:31 GMT
அன்பு இயக்கத்தில் உருவாகி உள்ள வால்டர் படத்தின் நாயகனான சிபிராஜ், அவருடன் நடிக்க பயந்ததாக கூறியுள்ளார்.
சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வால்டர்’. அறிமுக இயக்குனர் அன்பு இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரின் கான்ஞ்வாலா நடித்துள்ளார். சமுத்திரகனி, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 

இதில் நடிகர் சிபிராஜ் பேசியதாவது: “சினிமாவில் ஒரு நல்ல படம் அதற்கு தேவையானதை அதுவே தேடிக்கொள்ளும் என்பார்கள் அது எப்படி என்று யோசிப்பேன். ஆனால் இந்தப்படத்தில் அது நடந்தது. ஐந்து வருடமாக உழைத்து, இந்தப்படத்தை பல தயாரிப்பாளர்களிடம் கொண்டு சென்று, பெரும் கஷ்டங்களுக்கு பிறகு இப்போது இயக்கியுள்ளார் அன்பு. 



இறுதியில் இப்படம் ஒரு நல்ல பொறுப்பான தயாரிப்பாளரிடம் வந்து சேர்ந்துள்ளது. இப்படத்தில் நட்டி நடிக்கிறார் எனும்போதே எனக்கு பயமாக இருந்தது. அவர் மீது எனக்கு பெரும் மரியாதை இருக்கிறது. அப்பாவுடனும் வடிவேல் சாருடனும் நடிக்கும் போது பயமாக இருக்கும். எப்படி இவர்கள் முன் நடிப்பது என்று. 

அதே மாதிரி தான் நட்டி சார் முன் நடிக்க பயமாக இருந்தது. ஆனால் அவர் மிக ஆதரவாக இருந்தார். இந்தப்படம் ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து இப்போது ஒரு நல்ல நிலையை வந்தடைந்துள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாகவே படத்தின் சாட்டிலைட் விற்றுவிட்டது.  படத்தின் மீதும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்”. இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News