சினிமா
சசிகுமார்

கத்துக்குட்டி இயக்குனருக்கு தங்க செயின் பரிசளித்த சசிகுமார்

Published On 2020-03-09 13:22 IST   |   Update On 2020-03-09 13:22:00 IST
கத்துக்குட்டி இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நடித்து முடித்துள்ள சசிகுமார், அவருக்கு தங்க செயின் பரிசாக அளித்துள்ளார்.
‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணன் அடுத்ததாக சசிகுமார் நடிக்கும் படத்தை இயக்கி வந்தார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சமுத்திரகனி, சூரி, கலையரசன் ஆகியோருடன் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக உருவாகி வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.



திட்டமிட்டதற்கு முன்னதாகவே படப்பிடிப்பை நிறைவு செய்த இயக்குனர் இரா.சரவணனுக்கு நடிகர் சசிகுமார் தங்க செயின் பரிசாக அளித்தார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் சசிகுமார் நடித்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம் போன்ற படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News