சினிமா
விக்ரம் பிரபு

பொன்னியின் செல்வனில் வில்லனாக விக்ரம் பிரபு?

Published On 2020-03-08 11:13 GMT   |   Update On 2020-03-08 11:13 GMT
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பிரபு வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். 



பொன்னியின் செல்வன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் விக்ரம் பிரபு பேட்டி அளித்த போது “நீங்க இந்த படத்தில் நெகடிவ் ரோல் தான் நடிக்கிறீங்களா” என்று தொகுப்பாளர் கேட்க. அதற்கு பதிலளித்த நடிகர் விக்ரம் பிரபு “இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்” என்று கேள்வியை மழுப்பும் விதமாக பதிலளித்தார். இப்படத்தில் எனக்கு தெரிந்த வரை 27 பேர் நடித்து வருகிறார்கள்” என்றும் கூறினார்.
Tags:    

Similar News