சினிமா
ரஜினி

கொரோனாவால் அண்ணாத்த படப்பிடிப்பு ரத்து?

Published On 2020-03-05 03:07 GMT   |   Update On 2020-03-05 03:07 GMT
வடமாநிலங்களில் நடக்க இருந்த ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு, கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்துள்ளனர். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக தயாராகி வரும் இதில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. இரண்டு கட்ட படப்பிடிப்புகளை அங்கு முடித்துள்ளனர். அடுத்தகட்ட படப்பிடிப்பை கொல்கத்தா, புனே உள்ளிட்ட வடமாநில நகரங்களில் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.



ஆனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வடமாநில படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு ராமோஜிராவ் திரைப்பட நகரிலேயே தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடிவுசெய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முழு படப்பிடிப்பையும் அங்கேயே முடித்துவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதற்காக ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது.
Tags:    

Similar News