சினிமா
காஜல் அகர்வால்

மன வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை - காஜல் அகர்வால்

Published On 2020-02-21 02:22 GMT   |   Update On 2020-02-21 02:22 GMT
இந்தியன் 2 படப்பிடிப்பில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், மன வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று காஜல் அகர்வால் கூறியிருக்கிறார்.
சங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது மனநிலையை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக காஜல் அகர்வால் ட்விட்டர் பதிவில், ‘என்னுடன் பணியாற்றியவர்களின் எதிர்பாராத மரணம், எனக்குத் தரும் மனவலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. 



கிருஷ்ணா, சந்திரன் மற்றும் மது. உங்கள் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள், தனிமையான இந்தத் தருணத்தில் கடவுள் அவர்களுக்கு வலிமையைத் தரட்டும். பயங்கரமான கிரேன் விபத்தில் அதிர்ச்சி, குழப்பம், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். உயிரோடு இருந்து இந்த டுவீட்டைப் பதிவேற்ற ஒரு நொடி மட்டுமே ஆனது. அந்த ஒரு தருணம். நன்றியுணர்வோடு இருக்கிறேன். நேரம் மற்றும் உயிரின் மதிப்பு குறித்து நிறைய கற்றுக்கொண்டேன்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
Tags:    

Similar News