சினிமா
பா.ரஞ்சித் இயக்க உள்ள புதிய படத்தில் தான் பாக்ஸராக நடிக்க உள்ளதாக நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். ‘காலா’ திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது இந்தப் படத்துக்கு முன்பாக தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாக பேசப்பட்டது.
My love for sports coming alive on screen
— Arya (@arya_offl) February 20, 2020
All set to face the boxers in the ring with @beemji sir for our next 💪 It’s the most challenging film of my career. Loving the experience. #Ranjith sir is just phenomenal 😍😍😎 @Music_Santhosh@K9Studioz#AnbuArivu#Muralipic.twitter.com/1ejKMipNYh
இந்நிலையில், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஆர்யா பாக்ஸராக நடிக்க உள்ளார். இப்படம் தனது திரை வாழ்க்கையில் சவால் நிறைந்த படமாக இருக்கும் என ஆர்யா தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக ஆர்யா தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.