சினிமா
டோலிவுட்டுக்கு செல்லும் பிரியா பவானி சங்கர்
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர், அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
`மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தற்போது, கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்துள்ள மாஃபியா திரைப்படம் நாளை ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், இவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். ஸ்ரீகாந்த் ரெட்டி எனும் அறிமுக இயக்குனர் இயக்கும் ’அகம் பிரம்மாஸ்மி’ எனும் படத்தில் ஹீரோயினாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு நாயகனாக நடிக்க உள்ளார்.