சினிமா
இசை பார்த்தேன், விசை உணர்ந்தேன் - மாரி செல்வராஜ்
பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், இசை பார்த்தேன், விசை உணர்ந்தேன் என்று கூறியிருக்கிறார்.
பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இப்படத்தில் கதிர், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலமாக இப்படத்தை தயாரித்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரஜினி, கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும், மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இப்படத்தை பார்த்து பாராட்டினார்கள்.
🎶இசை பார்த்தேன்🖤 விசை உணர்ந்தேன்🎶 #ilaiyaraja love🖤🖤🖤🖤 pic.twitter.com/dF5HdDP8kd
— Mari Selvaraj (@mari_selvaraj) November 26, 2019
மாரி செல்வராஜ் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க இருக்கிறார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார்.
இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து பேசியிருக்கிறார். அவரை சந்தித்த மகிழ்ச்சியில் ‘இசை பார்த்தேன், விசை உணர்ந்தேன்’ என்று கூறியிருக்கிறார்.