சினிமா
கவுதம் மேனன்

சிரிச்சு, ரசிச்சு ரொம்ப நாளாகுது - கவுதம் மேனன்

Published On 2019-11-26 12:32 GMT   |   Update On 2019-11-26 12:32 GMT
பல வெற்றி படங்களை இயக்கிய கவுதம் மேனன், சமீபத்தில் கலந்துக் கொண்ட விழாவில், நான் சிரிச்சு, ரசிச்சு ரொம்ப நாளாகுது என்று பேசியிருக்கிறார்.
தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி இருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. கடந்த 2016ல் துவங்கிய இந்த படத்தை ரிலீஸ் செய்ய பல முறை முயற்சிகள் எடுக்கப்பட்டு அது தோல்வியில் முடிந்தது. வரும் 29ந்தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ்தான், படத்தை தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்கிறார். 

இந்நிலையில், பப்பி படத்தில் நடித்த வருணை வைத்து, கவுதம் மேனன், ஜோஷ்வா - இமை போல் காக்க என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தையும் தயாரிப்பவர் ஐசரி கணேஷ் தான். அவர், தன்னுடைய படங்களின் வெற்றியை சமீபத்தில் முதல்வர் பழனிச்சாமியை அழைத்து வந்து கொண்டாடினார். 



அப்போது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குநர் கவுதம் மேனன் பேசும்போது, ‘சிரிச்சு, ரசிச்சு படம் பண்ணி ரொம்ப நாளாகுது. என்னுடைய கஷ்ட சூழ்நிலையை அறிந்து, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தான் என்னை அழைத்து பேசினார். எனை நோக்கி பாயும் படத்தின் ரிலீசுக்கு ஏற்பாடு செய்தவர், ஜோஷ்வா என்ற புதுப்படத்தையும் இயக்கும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறார். இப்போதுதான், பழைய படி நான் சிரிக்கத் துவங்கி இருக்கிறேன்’ என்றார்.
Tags:    

Similar News