சினிமா
ஒற்றைப் பனைமரம் படக்குழு

இலங்கையில் நடந்த உண்மை சம்பவம் படமாகிறது

Published On 2019-09-27 14:31 IST   |   Update On 2019-09-27 14:31:00 IST
இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 'ஒற்றைப் பனைமரம்' என்கிற படம் உருவாகி இருக்கிறது.
திரைப்பட வெளியீட்டில் பிரபலமான ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம். ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் ஒற்றைப் பனைமரம்  40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது.



விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரெய்லரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார். அஷ்வமித்ரா இசையமைத்திருக்கும் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புதியவன் ராசையா இயக்கி இருக்கிறார். புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Similar News