சினிமா
அனுஷ்கா

பொன்னியின் செல்வனில் இருந்து அனுஷ்கா விலகல்

Published On 2019-09-27 08:27 GMT   |   Update On 2019-09-27 08:27 GMT
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நடிகை அனுஷ்கா விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கல்கியின் வரலாற்று புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளார். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பார்த்திபன், அனுஷ்கா ஷெட்டி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பல நட்சத்திரங்களின் பெயர்கள் இந்த படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வந்தன. 



ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஆகிய இருவர் மட்டுமே இதை உறுதி செய்துள்ளனர். சமீபத்தில் நடிகர் பார்த்திபனும் டுவிட்டர் பக்கத்தில் அவர் நடிப்பதாக அறிவித்தார். அதன் பின்னர் ஜெயராம், அமலா பால் ஆகியோரும் படத்தில் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தினர். இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிகை அனுஷ்கா நடிக்கவிருந்தார். ஆனால் அவர் தற்போது சம்பளம் குறைவு என்பதால் விலகிவிட்டார் என கூறப்படுகிறது. அனுஷ்காவிற்கு பதிலாக அந்த இடத்தில் த்ரிஷாவை நடிக்கவைக்க இயக்குனர் ஆலோசித்து வருகிறார் என்கிறார்கள்.
Tags:    

Similar News