சினிமா
மதுமிதா

பிக் பாஸ் வீட்டுக்குள் தாலியை கழற்றி வைத்தது ஏன்? - மதுமிதா விளக்கம்

Published On 2019-09-26 14:23 GMT   |   Update On 2019-09-26 14:23 GMT
பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று வெளியேறிய மதுமிதா, தாலியை கழற்றி வைத்தது ஏன் என்பதற்கான விளக்கத்தை பேட்டியில் கூறியிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஜூன் மாதம் 23-ந்தேதி தொடங்கியது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். ’டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார்.

அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்’ என்று நிகழ்ச்சி குழு தெரிவித்தது. 



தமிழ்ப்பெண் என்று அடையாளப்படுத்திக் கொண்ட மதுமிதா நிகழ்ச்சிக்காக தாலியை கழற்றிவிட்டு வீட்டுக்குள் போனது குறித்து சர்ச்சைகள் கிளம்பின. இந்த விவகாரம் குறித்து முதல்முறையாக ஒரு பேட்டியில் மனம் விட்டு பேசியுள்ளார் மதுமிதா.

அதில் அவர், ’பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் எனது பொருட்களை சோதனை செய்தார்கள். அப்போது தாலி போன்ற பெரிய நகைகளை அணிந்தால் அது மைக்கில் உரசும், தாலியை அணிய வேண்டாம் என்று கூறினார்கள். தொடர்ந்து தாலியை எப்படி கழற்ற முடியும் என கேட்க, டாஸ்க் பண்ணும்போது யாராவது உங்கள் தாலியை பிடித்து இழுத்து அறுந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்கள். இதுகுறித்து என் கணவரிடம் கேட்க அவரும் சரி என்ற பிறகே தாலியை கழற்றினேன்’ என கூறியுள்ளார்.
Tags:    

Similar News