சினிமா
அமலாபால்

ஆடம்பர வாழ்க்கையை வெறுக்கும் அமலாபால்

Published On 2019-09-26 11:33 GMT   |   Update On 2019-09-26 11:33 GMT
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், ஆடம்பர வாழ்க்கை வாழ பிடிக்கவில்லை, இயற்கையை சார்ந்து வாழ பிடிக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இயக்குனர் விஜய்யுடனான திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடிந்த பிறகு மீண்டும் சினிமாவில் பிசியான அமலாபாலுக்கு ஆடை படம் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் விளைவாக அவரிடம் கதை சொல்ல இயக்குனர்கள் ஆர்வமுடன் உள்ளனர். ஆனால் அவரோ அமைதியான வாழ்க்கையை விரும்பி பயணங்களில் தான் ஆர்வம் காட்டுகிறார். 

பாண்டிச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம் தனக்கு பெரும் அமைதியை தந்ததாகவும், வித்தியாசமான வாழ்க்கை தனக்காக இங்கு காத்திருந்ததை இப்போதுதான் தாம் உணர்ந்து உள்ளதாகவும் கூறி இருக்கிறார். இப்போது தனக்கு ஆடம்பர வாழ்க்கை வாழ பிடிக்கவில்லை, இயற்கையை சார்ந்து வாழும் வாழ்க்கை ரொம்பவும் பிடித்து இருப்பதாகவும் கூறுகிறார். தான் வாங்கிய காரை கூட விற்று விட்டார். 



இமயமலையின் கீழ் கங்கை வரைக்கும் ஆன்மீக பயணம் மேற்கொண்டு விட்டு வந்திருக்கும் அமலாபாலுக்கு, இயற்கையோடு ஒன்றி வாழ ரொம்பவும் பிடித்து இருக்கிறது. அதனால்தான், அடிக்கடி ஒரு சின்ன பையில் கொஞ்சம் துணிகளை எடுத்துக் கொண்டு இயற்கை சூழ்ந்த காடுகளில் குழுவாக சமைத்து சாப்பிடுவது என்பதில் விருப்பம் அதிகமாகி இருக்கிறதாம். 
Tags:    

Similar News