சினிமா
டெமி மூர்

15 வயதில் என் தாயால் விபசாரத்தில் தள்ளப்பட்டேன்- நடிகை பரபரப்பு தகவல்

Published On 2019-09-25 13:35 IST   |   Update On 2019-09-25 13:35:00 IST
15 வயதில் தன் தாயால் விபசாரத்தில் தள்ளப்பட்டதாக ஹாலிவுட் நடிகை டெமி மூர் தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஹாலிவுட் சினிமாவில் கடந்த 1970 மற்றும் 80 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் டெமி மூர். இவர் தன்னுடைய வாழ்க்கையில் தான் சந்தித்த மிகவும் கொடுமையான அனுபவங்களை தன் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். 56 வயதாகும் நடிகை டெமி மூர் இன்சைட் அவுட் எனும் சுயசரிதை புத்தகத்தை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தின் மூலம் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை பற்றியும் விவரித்துள்ளார்.

அந்த புத்தகத்தில் பல அதிர்ச்சி தரக்கூடிய தகவல் வருமாறு:- எனக்கு 15 வயது இருக்கும். வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது என் வீட்டின் வாசலில் வயதான ஒருவர் கையில் வீட்டினுடைய சாவியை வைத்துக்கொண்டு எனக்காக காத்து கொண்டு இருந்தார். அந்த வயதானவரை பார்த்த நான், யார் நீங்கள்? எதற்காக என் வீட்டு வாசலில் அமர்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டேன். 

அதற்கு அந்த பெரியவர் உன்னை உனது தாயார் என்னிடம் 500 டாலருக்கு விற்பனை செய்திருக்கிறார் என்று கூறினார். இதனை கேட்ட 15 வயது சிறுமியான நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அதற்குபின் அந்த நபரால் பலாத்காரம் செய்யப்பட்டேன். அந்த சம்பவத்தை அடுத்து உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் அழுத்தத்துக்கு உள்ளானேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



டெமி மூர் முதலில் பிரடி மூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இரண்டாவதாக பிரபல நடிகரான புரூஸ் வில்லியம்சை திருமணம் செய்து கொண்டார். இவருடனும் வாழ்க்கை பயணம் சரியாக அமையாத காரணத்தால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதனையடுத்து தன்னை விட 15 வயது குறைவாக இருந்த நடிகர் ஆஸ்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப்பின் கர்ப்பமானார். 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது கருச்சிதைவு ஏற்பட்டது. இந்த கருச்சிதைவு ஏற்படுவதற்கு பின்பு இவரது வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது. 

காரணம் இந்த குழந்தையின் பிரிவை தாங்க முடியாமல் தினந்தோறும் தூக்க மாத்திரைகளையும் மதுவுக்கு அடிமையாகவும் வாழ்ந்து வந்துள்ளார். மூன்றாவது கணவருடனும் மனக்கசப்பு ஏற்பட்டு கடந்த 2013-ம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டார். தற்போது அவர் தன் மகள் ஒருவருடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். தற்போது எழுதியிருக்கும் இன்சைட் அவுட் புத்தகத்தை தன்னுடைய மூன்று மகள்களுக்கும் தன்னுடைய அம்மாக்காகவும் சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார்.

Similar News