சினிமா
ஐஸ்வர்யா ராஜேஷ்

சினிமாவில் நடிக்க நிறம் முக்கியம் இல்லை- ஐஸ்வர்யா ராஜேஷ்

Published On 2019-09-25 07:01 GMT   |   Update On 2019-09-25 07:01 GMT
சினிமாவில் நடிக்க நிறம் முக்கியம் இல்லை, திறமை இருந்தால் போதும் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தி படமொன்றிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நான் நடிகையாக ஆசைப்பட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்ததும் வெள்ளையாக இருப்பவர்களுக்கே இங்கு வாய்ப்பு இல்லை. நீ இருக்கிற கருப்பு நிறத்துக்கு நடிகையாக விரும்பலாமா? என்று பலரும் கேலி பேசினர். இது மனதை காயப்படுத்தியது. 

ஆனாலும் தன்னம்பிக்கை இழக்காமல் நான் யார் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற வெறியை வளர்த்துக்கொண்டு வேலை செய்தேன். விடாப்பிடியாக முயற்சிகள் செய்ய இரண்டாவது நாயகி, கதாநாயகிக்கு தோழி என்றெல்லாம் கதாபாத்திரங்கள் வந்தன. ஐந்து ஆண்டுகள் இதே நிலைமைதான். 2015-ல் நடித்த காக்கா முட்டை பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் 2 குழந்தைகளுக்கு தாயாக நடித்தேன். 



விஜய்சேதுபதிதான் யோசிக்காமல் நடியுங்கள். அவர் பெரிய இயக்குனர் என்று ஊக்கப்படுத்தினார். நடிப்பு துறையில் நிறம் முக்கியம் இல்லை என்பதை அந்த படம் நிரூபித்தது. கனா படமும் பெயர் வாங்கி கொடுத்தது. அதன்பிறகு மணிரத்னம், கவுதம் மேனன், இந்தி பட இயக்குனர் அர்ஜுன் ராம்பால் என்று முன்னணி இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்புகள் தேடி வந்தன. சினிமா துறையில் ஒவ்வொரு படியாக ஏறி முன்னுக்கு வந்து விட்டேன்.” இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.
Tags:    

Similar News