சினிமா
பிரியங்கா

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் வெயில் பிரியங்கா

Published On 2019-09-23 16:09 GMT   |   Update On 2019-09-23 16:09 GMT
வெயில் படம் மூலம் மிகவும் புகழ் பெற்ற பிரியங்கா, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
’உருகுதே... மருகுதே...’ பாடல் புகழ் ’வெயில்’ பிரியங்கா, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஓ. ராஜா கஜினி இயக்கத்தில், ‘உற்றான்” படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.

இதில் ’கமலி’ என்ற கல்லூரி பேராசிரியையாக மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். “கமலி” கதாபாத்திரம் பற்றி பிரியங்காவுடன் டைரக்டர் விவரித்தபோது, அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட பிரியங்கா, ‘‘இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்திற்காகத்தான் இவ்வளவு காலம் காத்திருந்தேன். தமிழில் மறுபிரவேசமாக எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து விட்டது’’ என மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார். 

ஓ.ராஜா கஜினி இதுபற்றி கூறும்போது, ``கமலி” கதாபாத்திரம் “உற்றான்” படத்தின் முதுகெலும்பாக அமையும், கதாநாயகன் நிர்வாணமாக நடித்த காட்சி ஒன்றில், அவருக்கு உள்ளாடை மாட்டிவிட்டு, துணிச்சலாக நடித்திருப்பதோடு, போலீஸ் நிலைய காட்சி ஒன்றில் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் நடிக்காத அளவுக்கு அரை நிர்வாணமாக மிக துணிச்சலாக நடித்துள்ளார். கமலி கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் மிக நீண்ட காலத்திற்கு பேசப்படும்’’ என்றார். 



படத்தில் ரோஷன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஹிரோஷினி கோமலி அறிமுகமாகிறார். வெயில் பிரியங்காவுக்கு ஜோடியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பத்திரிகையாளரும் வசனகர்த்தாவுமான ரவிஷங்கர் நடித்துள்ளார்.
Tags:    

Similar News