சினிமா
கயல் சந்திரமௌலி

திட்டம் போட்டு திருடுற கூட்டத்தை அதிகம் எதிர் பார்க்கும் கயல் சந்திரமௌலி

Published On 2019-09-23 13:17 GMT   |   Update On 2019-09-23 13:17 GMT
கயல் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் கயன் சந்திரமௌலி.
கயல் படம் மூலம் அறிமுகமாகமானவர் சந்திரமௌலி. இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.  அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் 2 மூவு ஃபப்ஸ் நிறுவனம் சார்பில் ரகுநாதன் பி.எஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகியிருக்கிறது.

இப்படத்தில், கயல் சந்திரமௌலியுடன் சாட்னா டைட்டஸ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், சாம்ஸ், டேனியல் ஆணி போப், அர்ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்டிசி பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறது. 

இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கயல் சந்திரமெளலி பேசும்போது, ‘கயல் படத்திற்கு பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் எதுவென்று கேட்டால் அது ‘ திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ தான். அது எனக்கு எப்படி ஒரு அறிமுக படமாக கிடைத்ததோ, அதேபோல் என் அண்ணனுக்கு தயாரிப்பில் இது முதல் படம்.



பல இன்னல்களை தாண்டி, பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். திட்டம் போட்டு ஒரு கும்பல் உலக கோப்பையை திருட நினைக்கிறது. அந்த திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை. சினிமா ரசிகர்கள் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்து இப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியிடுகிறோம்’ என்றார்.

மார்டின் ஜோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அஷ்வத் இசையமைத்துள்ளார். 
Tags:    

Similar News