சினிமா
ஜூனியர் என்.டி.ஆர், அட்லீ

அட்லீ இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்?

Published On 2019-09-23 09:20 GMT   |   Update On 2019-09-23 09:20 GMT
பிகில் படத்தை தொடர்ந்து அட்லீ அடுத்ததாக இயக்கும் படத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ எனும் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், அட்லீ. இந்த படம் ரூ.50 கோடி வசூல் குவித்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்தார், அட்லீ. தற்போது விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் வருகிற தீபாவளி தினத்தன்று ரிலீசாக உள்ளது. 

இந்நிலையில், அட்லீ அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர்-ஐ சந்தித்து அட்லீ கதை கூறியதாகவும், அது அவருக்கு பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கில் உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஜூனியர் என்.டி.ஆர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ எனும் வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News