சினிமா
ஜெனிபர்

ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்

Published On 2019-09-22 10:07 GMT   |   Update On 2019-09-22 10:07 GMT
ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை ஒருவர் வடபழனி போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
வடபழனி ஆற்காடு சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர். சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடரில் துணை நடிகையாக உள்ளார். இவர் வடபழனி போலீசில் நேற்று இரவு புகார் மனு ஒன்றை அளித்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துணை நடிகரான பக்ருதீன் என்பவர் அறிமுகமானார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த பக்ருதீன் கடந்த வருடம் என்னை காதலிப்பதாக கூறினார்.

இதைத் தொடர்ந்து அவருடன் நெருங்கி பழகி வந்தேன். நான் அவருடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை ஆபாசமாக வீடியோ படம் எடுத்து வைத்து கொண்டு மிரட்டி வருகிறார். ஏற்கனவே பக்ருதீன் மீது திருவல்லிக்கேணி, புழல் போலீசில் புகார் செய்து இருந்தேன். அப்போது அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி இருந்தனர்.

தற்போது மீண்டும் பக்ருதீன் பழைய வீடியோ காட்சிகளை காட்டி பணம் கேட்டு மிரட்டுகிறார். நேற்று என் வீட்டிற்கு வந்த பக்ருதீன் எனது தாயை கொலை செய்து விடுவதாக கூறிவிட்டு சென்றார். பக்ருதீன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார். இதையடுத்து பக்ருதீன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News