சினிமா
என்னைக்கு என்கிட்ட கதை இருந்திருக்கு - வெங்கட் பிரபு
இணைய தளத்தில் ரசிகர் ஒருவரின் கருத்துக்கு இயக்குனர் வெங்கட் பிரபு, என்னைக்கு என்கிட்ட கதை இருந்திருக்கு என்று பதில் அளித்து இருக்கிறார்.
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. மேலும் இப்படத்தின் டிரைலரை பார்த்து பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
இதில் இயக்குனர் வெங்கட் பிரபுவும் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் மீண்டும் அஜித், யுவன், வெங்கட் பிரபு இணைந்த மங்காத்தா கூட்டணி எப்போது என்று கேட்டார். அதற்கு மற்றொரு ரசிகர், திரும்ப வெங்கட் பிரபு எடுத்தா அது நிச்சயமாக பிளாப் ஆகும்னு வெங்கட் பிரபுவுக்கே தெரியும். ஏனென்றால் வெங்கட் பிரபு கிட்ட ஒழுங்கான கதை இல்ல என்று கூறினார்.
Vechikita vanjana pandrey bro!! Enniki enkita kadhai irrundhurukku ;))) https://t.co/S8SRc0zO0b
— venkat prabhu (@vp_offl) June 12, 2019
இதற்கு வெங்கட் பிரபு, ‘வச்சிகிட்டா வஞ்சனை பண்றேன். என்னைக்கு என்கிட்ட கதை இருந்திருக்கு என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.