சினிமா

வதந்திகளுக்கு பயப்பட மாட்டேன் - ரகுல் ப்ரீத் சிங்

Published On 2019-03-29 10:43 GMT   |   Update On 2019-03-29 10:43 GMT
தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், வதந்திகளுக்கு பயப்பட மாட்டேன் என்று கூறியிருக்கிறார். #RakulPreetSingh RakulPreet
ரகுல் ப்ரீத் சிங் நடித்த சில படங்கள் வெற்றி பெறாததால் கடந்த ஆண்டு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது. தனது சம்பளத்தை ரகுல் ப்ரீத் உயர்த்தியதால் அவருக்கு பட வாய்ப்புகள் வருவதில்லை என்று தகவல் பரவியது. இந்த தகவல் பற்றி அவர் கடுமையாக சாடி உள்ளார்.

இதுகுறித்து ரகுல் கூறும்போது, ’சிலர் என்னைப்பற்றி பொய்யான வதந்திகளை பரப்ப முயற்சிக்கின்றனர். அதுபோன்ற வதந்திகளை கண்டு பயப்படும் ஆள் நானில்லை. என்னை எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்துகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உயரத்திற்கு வருவேன். 



என்னை தாக்க வேண்டும் என்று எண்ணினால் நேரடியாக வாருங்கள் பார்க்கலாம்’ என்று கூறியுள்ளார். இந்த ஆண்டில் சூர்யாவுடன் என்ஜிகே, சிவகார்த்திகேயனுடன் புதியபடம் என 2 தமிழ் மற்றும் 2 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
Tags:    

Similar News