சினிமா

திகில் கலந்த காமெடி படத்தில் தமன்னா

Published On 2019-03-28 12:14 GMT   |   Update On 2019-03-28 12:14 GMT
‘அதே கண்கள்’ படத்தை இயக்கிய ரோகின் வெங்கடேசன் அடுத்ததாக இயக்கவிருக்கும் திகில் கலந்த காமெடி படத்தில் தமன்னா முன்னணி கதாபாத்திரமாக நடிக்கிறார். #Tamannaah #RohinVenkatesan
ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி, ஷிவதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அதே கண்கள்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சி.வி.குமார் இந்த படத்தை தயாரித்தார். 

இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பால், இயக்குநர் ரோகின் வெங்கடேசன் தனது அடுத்த படத்துக்கான கதையில் பொறுமை காத்தார். இறுதியில், திகில், காமெடி பாணியில் ஒரு கதையை உருவாக்கினார். தற்போது இக்கதையில் நடிக்க தமன்னா சம்மதம் தெரிவித்துள்ளார்.



இதில், யாருக்கும் நாயகியாக தமன்னா நடிக்கவில்லை. தனிப்பட்ட ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும், தமன்னாவோடு நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுதவிர சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து தமன்னா நடித்து வருகிறார். #Tamannaah #RohinVenkatesan

Tags:    

Similar News