சினிமா

ஜெயம் ரவியின் நீண்டநாள் கனவு நிறைவேறியது

Published On 2019-02-26 11:05 GMT   |   Update On 2019-02-26 11:05 GMT
ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் ஜெயம் ரவிக்கு அந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றியிருக்கிறாராம். #JayamRavi
ஜெயம் ரவி ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

குறிப்பிட்டஒரு நிறுவனத்தின் தயாரிப்பில் மூன்று படங்களில் ஜெயம்ரவி நடிக்க ஒப்புக்கொள்ள காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி திரையுலகில் அனைவரிடமும் எழுந்தது. சென்னை நகரில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியாக போயஸ் கார்டன் பகுதி இருந்து வருகிறது. இப்பகுதியில் வீடு விலைக்கு வாங்க வேண்டும் என்பது ஜெயம் ரவியின் நீண்ட நாள் கனவு என்கின்றனர்.


நிறுவனத்திற்கு சொந்தமாக சென்னை போயஸ் கார்டனில் சுமார் 20 கோடி மதிப்பில் ஒரு தனிவீடு இருக்கிறதாம். அந்த வீட்டை ஜெயம்ரவி வாங்க முயற்சித்த போது பணத்திற்கு பதிலாக தங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தால் வீட்டை தருவதாக கூறியதால் மூன்று படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். #JayamRavi #ScreenSceneMediaEntertainment 

Tags:    

Similar News