சினிமா

மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்

Published On 2019-01-04 03:22 GMT   |   Update On 2019-01-04 03:22 GMT
`பேட்ட' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வேறொரு படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Petta #Rajinikanth #KarthickSubbaraj
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் `பேட்ட' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

`பேட்ட' படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சமீபத்தில் வெளியாகிய டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் விருந்தாக அமையும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.



`பேட்ட' படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படம் அரசியல் படமாக இருக்காது என்றும், சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் அம்சங்கள் அனைத்தும் இருக்கும் என்றும் முருகதாஸ் கூறியுள்ளார். ரஜினிகாந்த் தற்போது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். ரஜினி சென்னை திரும்பியவுடன் ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம் தொடங்கவிருக்கிறது.

இந்த நிலையில், இந்த படத்தை முடித்த பிறகு ரஜினி மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் கூறிய வேறொரு கதை ரஜினிக்கு பிடித்திருப்பதாகவும், முருகதாஸ் படத்தை முடித்த பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.



மேலும் இந்த படத்தை முடித்த பிறகு ரஜினி, எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும், அந்த படத்திற்கு பிறகு அவர் முழுநேர அரசியலில் கவனம் செலுத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது. #Petta #Rajinikanth #KarthickSubbaraj #Rajinikanth167

Tags:    

Similar News