சினிமா

அடுத்த படத்திற்காக மொட்டையடித்த அதர்வா

Published On 2018-09-22 10:40 GMT   |   Update On 2018-09-22 10:40 GMT
`இமைக்கா நொடிகள்' படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் `பூமராங்' படத்திற்காக நடிகர் அதர்வா மொட்டையடித்துக் கொண்டு நடித்திருக்கிறார். #Boomerang #Atharvaa
கண்ணன் இயக்கத்தில் அதர்வா - மேகா ஆகாஷ், இந்துஜா, உபென் படேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்க, மசாலா பிக்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `பூமராங்'.

படப்பிடிப்பு முடிந்து அடுத்த மாதம் வெளியாக இருக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சிக்காக நடிகர் அதர்வா மொட்டை அடித்துக் கொண்டு நடித்திருக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குநர் கண்ணன் பேசும்போது,

அதர்வா இயக்குனரின் நடிகர் என்பதை தமிழ் சினிமா விரைவில் அறியும். சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டத்திலேயே பாலாவின் பரதேசி படத்தில் யாரும் செய்யத் துணியாத கதாபாத்திரத்தில் நடித்து தன்னை நிரூபித்தவர். படத்தில் வரும் அவர் கதாபாத்திரத்தின் மூன்று வெவ்வேறு தோற்றங்களின் தீவிரத்தை பற்றி நான் விளக்கியவுடன், அவர் அதனுள் ஒன்றிவிட்டார். 



உடனடியாக படத்தின் முக்கிய காட்சிகக்காக தனது தலையை மொட்டையடிக்க தயாரானார். இந்த காட்சிகளை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 5 நாட்கள் கடைசி கட்ட படப்பிடிப்பில் படம் பிடிக்க முடிவு செய்தோம். மொட்டை அடித்ததால், முடி வளர இரண்டு மாதங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியது. எங்கள் படத்துக்காக அவர் அதை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. இமைக்கா நொடிகள் போலவே இந்த படத்துக்காகவும் அவருக்கு பாராட்டுக்கள் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்றார். 

பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு, அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைக்க, செல்வா ஆர்.கே. படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். #Boomerang #Atharvaa #MeghaAkash

Tags:    

Similar News