சினிமா

சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்

Published On 2018-09-02 15:25 GMT   |   Update On 2018-09-02 15:25 GMT
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்று நடிகரும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் சேலத்தில் பேட்டியளித்துள்ளார். #TRajendar #Simbu
சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், ‘அரசன்’ என்ற படத்தில் நடிக்க சம்மதித்து, நடிக்காமல் இருக்கிறார் என்று பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்த ஐகோர்ட் உத்தரவிட்டது.



இதுகுறித்து சிம்புவின் அப்பாவும், நடிகரும் லட்சிய தி.மு.க. தலைவருமான டி.ராஜேந்தர் கூறும்போது, ‘சிம்பு நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அவருடைய வளர்ச்சியை தாங்க முடியாதவர்கள் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது குறித்து கோர்ட்டில் அப்பீல் செய்து சட்டப்படி நாங்கள் சந்திப்போம்’ என்றார்.
Tags:    

Similar News